திரையுலகை பொறுத்தவரை அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இரு துருவங்களாக காணப்படுகிறார்கள். இவர்கள் இருவருமே போட்டியாளர்கள் என்று பலரும் கருதி வருவதோடு இருவரின் ரசிகர்களும் அடிக்கடி சண்டையிட்டு வருவதும் வழக்கமாகி வருகிறது.
ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதை பல இடங்களில் பல சமயங்களில் அவர்களே நிரூபித்துள்ளனர். உதாரணமாக சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்த போது விஜய் ஷாலினிக்கு போன் செய்து அஜித்தின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் தான் நேரில் வந்து பார்க்கட்டுமா என்றும் விஜய் கேட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி உள்ள சூழலில் தற்போது மேலும் ஒரு சம்வம் நடந்துள்ளது. அதாவது அஜித் அறுவை சிகிச்சை செய்த சமயத்தில் அவரை நேரில் சந்தித்து பேசிய விஜய் கோரிக்கை ஒன்றை வைத்தாராம்.
அதன்படி நான் அரசியலுக்கு போக போகிறேன். அதனால் என் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். எனவே நீங்களும் உங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள வேண்டும். அதற்கு வருடத்திற்கு 2 படங்களாவது நீங்கள் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாராம்.
அஜித் பொதுவாக ஒரு படம் முடிந்த பின்னர் தான் அடுத்த படத்தின் கதையே கேட்க தொடங்குவார். ஆனால் இந்த முறை விடாமுயற்சி படம் முடியாத நிலையில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் ஒப்புகொண்டு இருப்பதால், விஜய் சொன்னதை அஜித் ஃபாலோ செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.