Connect with us
   

Cinema

பாக்கியராஜ் மகளுக்கு குழந்தை உள்ளதா…??? சரண்யா கூறிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் தான் பாக்கியராஜ். இவர் பிரபல நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு சாந்தனு மற்றும் சரண்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

#image_title

இவர்களில் சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். சரண்யா தமிழில் பாரிஜாதம் என்ற படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

இதற்கிடையில் காதல் தோல்வி காரணமாக சரண்யா தற்கொலை முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மீடியா பக்கம் தலைகாட்டாமல் இருந்த சரண்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.

#image_title

அப்போது பேசிய அவர், “எனக்கு ஒரு மகன் இருக்கிறார். என் குழந்தையை கவனித்துக் கொண்டு நான் பிசினஸ் செய்வது கஷ்டமான வேலையாக இருக்கிறது. இப்போது தான் என் அம்மாவின் கஷ்டம் எனக்கு புரிகிறது. நாம் குழந்தைக்கு அம்மாவாகும் போது தான் நம்முடைய அம்மாவும், அப்பாவும் இப்படித்தானே நம்மை கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது” என கூறியுள்ளார்.

ஆனால் அவருடைய கணவர் யார்? எங்கு இருக்கிறார்? என்பது பற்றி சரண்யா கூறவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிற்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரின் திருமண புகைப்படங்களை வெளியிடாமல் பாக்கியராஜ் குடும்பத்தினர் ரகசியமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema

To Top