தமிழில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பு மட்டுமின்றி இயக்கம் இசை என பயங்கர பிசியாக உள்ளார். தற்போது அவரின் 50 வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ள நிலையில், குபேரன் என்ற படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார். இப்படி திரைவாழ்க்கையில் வெற்றி பெற்ற தனுஷ் அவரின் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல் தோல்வி அடைந்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிவதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தனர்.
இருப்பினும் சட்டப்படி விவாகரத்து பெறாததால் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்து விடலாம் என்று இருவீட்டாரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இருவரும் சமீபத்தில் தான் விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறினர்.
இந்நிலையில் தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரின் தந்தை கஸ்தூரி ராஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இது தொடர்பாக கஸ்தூரி ராஜா தனது மகன் தனுஷிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால் தனுஷ் பிடிகொடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.