எங்களின் விவாகரத்திற்கு இது மட்டும் தான் ஒரே காரணம்…. நளினி கூறியதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்…!!!!

0
6
#image_title

தமிழ் சினிமாவை ரஜினி கமல் இருவரும் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென நுழைந்து அவர்களுக்கு போட்டியாக மாறியவர் தான் நடிகர் ராமராஜன். கமல் நடிப்பு டான்ஸ் என அனைத்திலும் பட்டையை கிளப்புவார். அவரின் படங்களே சில சமயங்களில் சொதப்பும்.

actress nalini shared a secret about her divorce 01

ஆனால் ராமராஜனோ ஒரு கரகத்தை தலையில் வைத்து நடனமாடி ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இப்போது வரை ராமராஜனின் திரை வாழ்க்கையில் கரகாட்டக்காரன் படம் சிறந்த படமாக பார்க்கப்படுகிறது.

இவர் பிரபல நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரும் சம்மதிக்காத நிலையில் இருவரும் ஓடி சென்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், திடீரென விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இவர்களின் பிரிவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இருவருமே இப்போது வரை எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து பேசியதே கிடையாது. அந்த அளவிற்கு இருவரிடத்திலும் இன்றும் காதல் குறையாமல் உள்ளது.

actress nalini shared a secret about her divorce 02

இதற்கிடையில் நடிகை நளினி அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறியதாவது, “எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவர்தான் எனக்கு கணவராக வரவேண்டும். நானும் அவரும் தற்போது கூட நன்றாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு நேரம் சரியில்லை. நாங்கள் பிரிந்து இருந்தால் தான் நல்லது. பிள்ளைகள் தந்தையுடன் இருந்தால் நல்லது இல்லை என்று ஜாதகத்தில் கூறினார்கள். அவருக்கு ஜாதகத்தின் மீது பெரிய நம்பிக்கை உள்ளது. இதனால் தான் நாங்கள் இருவரும் பிரிந்தோம்” என கூறியுள்ளார். இதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.