Actress
வரலட்சுமிக்காக வருங்கால கணவர் செய்த சம்பவம்…. திருமணத்திற்கு முன்பே இப்படியா என ஷாக்காகும் ரசிகர்கள்….!!!!
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் போடா போடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான வரலட்சுமி தற்போது ஹீரோயின், வில்லி மற்றும் குணச்சித்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடித்து வருகிறார்.

#image_title
ஒருகட்டத்திற்கு மேல் தனக்கு ஹீரோயின் கேரக்டர் செட்டாகவில்லை என்பதை புரிந்து கொண்ட வரலட்சுமி சுதாரித்து கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டிற்குரியது. இந்நிலையில் 38 வயதாகும் வரலட்சுமிக்கு சமீபத்தில் நிகோலாய் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தொழிலதிபரான நிகோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார்.

#image_title
அதுமட்டுமல்ல நிகோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு 15 வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்த சூழலில் தான் வரலட்சுமி இவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே நிகோலாய் செய்துள்ள சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது நிகோலாய் சச்தேவ் தனது வருங்கால மனைவியான வரலட்சுமிக்கு மும்பையில் இரண்டு சொகுசு பங்களாக்களை வாங்கி கொடுத்துள்ளாராம். இவை இரண்டும் பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவிக்கு கோடி கணக்கில் பங்களா வாங்கி கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.