Connect with us
   

General

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….!!! எதற்காக தெரியுமா…???

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த தேர்வினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2,763 தேர்வு மையங்களில், 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே தேர்வு மையத்திற்கு சென்று விடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பிறகு வரும் தேர்வர்களுக்கு எக்காரணத்திற்காகவும் அனுமதி கிடையாது என்றும் அறிவித்துள்ளனர். தேர்வு மையங்களில் பெரும்பாலானவை பள்ளிகள் என்பதால் நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

More in General

To Top