Connect with us
   

Cinema

இந்து மதத்தை இழிவுப்படுத்தியதாக இயக்குனர் பா ரஞ்சித் மீது புகார்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா ரஞ்சித் இந்து மதத்தை இழிவுப்படுத்தி விட்டதாக அவர் மீது பாரத் இந்து முன்னணி அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். அதன்படி பா ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சிறுவயதில் நந்தி சிலை மீது ஏறி நின்றதாகவும், புத்தகத்தை சரஸ்வதி என்றும் அதன் மீது ஏறி நின்றால் படிப்பு வராது எனவும் கூறுவார்கள். அதனால் நான் வேண்டுமென்றே ஏறி நிற்பேன். அதேபோல் மூன்று சாமி கல் மீதும் ஏறி நின்றுள்ளேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்துக்கள் மனதில் ரணத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ள இயக்குனர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்குமாறும், ரஞ்சித் பேசிய இந்து மத வெறுப்பு வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து முற்றிலுமாக நீக்குமாறும் பாரத் இந்து முன்னணி அமைப்பினர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading

More in Cinema

To Top