
Cinema
அந்த பெண் தான் என்னை டார்ச்சர் செய்தார்…. ஜானி மாஸ்டர் மீதான பாலியல் புகாரில் அதிரடி திருப்பம்…!!!
தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வருபவர் தான் ஜானி மாஸ்டர். இவர் தமிழில் பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இப்படி உள்ள சூழலில் இளம் பெண் ஒருவர் இவர் மீது அளித்த பாலியல் புகார் காரணமாக தற்போது ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள ஜானி மாஸ்டர் இந்த புகார் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியிருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி அவர் கூறியதாவது, “பாலியல் ரீதியாக என் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. அந்த பெண் ஒரு நிகழ்ச்சியில் தான் எனக்கு அறிமுகமானார். அவர் மைனராக இருந்தபோது நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் சொல்கிறார். அவரிடம் திறமை இருந்தது. எனவே தான் என்னிடம் உதவி நடன இயக்குனராக சேர்த்து கொண்டேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்துகொள்ளும்படி மனரீதியாக டார்ச்சர் செய்துகொண்டே இருந்தார். பலமுறை மிரட்டவும் செய்தார். எனக்கு எதிராக சதி நடக்கிறது. அந்த பெண்ணின் பின்னால் யாரோ இருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.