திரையுலகில் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவின் இசைக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு அவரை வெறுப்பவர்களும் உள்ளனர். அதற்கு காரணம் அவரின் நடவடிக்கை தான்.
இசையை பொருத்தவரை நான் தான் பெரியவன். என்னை மிஞ்ச ஆள் கிடையாது என்று இளையராஜா கருதி வருவது தான் இங்கு பிரச்சனையே. மேலும் தான் இசையமைத்து பாடல்கள் அனைத்தும் எனக்கு மட்டுமே சொந்தம் என அவர் கூறி வருகிறார்.
இதனால் அவரின் பாடல்களை பிற படங்களிலோ அல்லது மேடை நிகழ்ச்சிகளிலோ பாடக் கூடாது என்றும், அப்படி பாடினால் தன்னிடம் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தில் இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக மஞ்ஞும்மல் பாய்ஸ், படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதோடு, பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடும் கோரியுள்ளனர். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி கூறியிருப்பதாவது, “பாடலின் உரிமையாளர்களான பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் முறைப்படி அனுமதி வாங்கி தான் அந்த பாடலை பயன்படுத்தி உள்ளோம்.
தெலுங்கு உரிமை மற்றும் பிற மொழி உரிமை என இரண்டு நிறுவனத்திலும் நாங்கள் முறையாக அனுமதி பெற்று உள்ளோம். அதனால் இந்த பாடலை பயன்படுத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளது. இந்த தேவையற்ற புகார்” என இளையராஜாவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.