பிரபல நடிகையின் மகளுக்கு ரூட்டு போடும் சிம்பு…. வலையில் சிக்குவாரா..???

0
8
#image_title

நடிகர் சிம்பு சினிமாவில் இருக்கிறாரா அல்லது விலகி விட்டாரா? என்று பலரும் கேள்வி கேட்கும் அளவிற்கு சிம்புவின் நிலை மாறிவிட்டது. ஏனெனில் சிம்பு நடிப்பில் படம் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்டது. அதற்கு காரணம் நடிகர் கமல் தான்.

simbu next movie team asked jhanvi kapoor as heroine01

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அவரின் 48 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பல மாதங்களாகி விட்டது. இந்த படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தானே தயாரிப்பதாக கூறிய கமல் அவர் நடிக்கும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் சிம்புவின் இந்த படம் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த படத்திற்காக சிம்பு நீண்ட முடி வளர்த்து இருப்பதால் அவரால் வேறு படத்திலும் நடிக்க முடியாமல் போய்விட்டது.

simbu next movie team asked jhanvi kapoor as heroine02

இந்நிலையில் இந்த படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. அதன்படி ஹீரோ மற்றும் வில்லன் என இருவருமே சிம்பு தான்.

இதில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்களாம். அதில் ஒரு கேரக்டருக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இன்னொரு நாயகியாக பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

simbu next movie team asked jhanvi kapoor as heroine03

தற்போது இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். இது உறுதியாகும் பட்சத்தில், சிம்பு படம் மூலம் கோலிவுட்டில் முதல் முறையாக ஜான்வி கபூர் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ சீக்கிரமாக படத்தை வெளியிட்டால் போதும் என சிம்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.