Connect with us
   

Cinema

பிரபல நடிகையை ஒருதலையாக காதலித்த ஆனந்த் ராஜ்…. வில்லன் நடிகரின் காதலி யார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் பிரபலமான சில வில்லன் நடிகர்கள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் என்றால் அது பொன்னம்பலம் மற்றும் ஆனந்த் ராஜ் ஆகிய இருவர் தான். இதில் ஆனந்த் ராஜ் பல படங்களில் அவரின் அற்புதமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

#image_title

குறிப்பாக ரஜினியின் பாட்ஷா படத்தில் அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போன்ற காட்சியில் எல்லாம் அல்டிமேட்டாக நடித்திருப்பார். இப்போது வில்லத்தனத்தை விட்டு காமெடி டிராக்குக்கு மாறியுள்ளார். அந்த வகையில் பல படங்களில் ஆனந்த் ராஜ் காமெடி செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் ஒருதலை காதல் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும் பிரபல நடிகை ஒருவரை தான் ஆனந்த் ராஜ் காதலித்து வந்துள்ளார். அதன்படி ஆனந்த் ராஜ் சென்னை தரமணியில் இருந்த நடிப்பு கல்லூரிக்கு நடந்தே செல்வாராம்.

#image_title

அப்போது அதன் அருகில் இருந்த கேட்டரிங் கல்லூரியில் பெண் ஒருவர் படித்து வந்துள்ளார். அவரை ஒருதலையாக காதலித்து வந்த ஆனந்த் ராஜ் தினமும் அவரை சைட் அடித்து கொண்டே அவர் பின்னால் ஃபாலோ செய்வாராம். அவரிடம் பேச வேண்டும் என்று ஆசை இருந்தாலும் தைரியம் வரவில்லையாம்.

ஒருநாள் நடிப்பு கல்லூரிக்கு இயக்குனர் ஸ்ரீதர் வர அங்கிருந்த யாரையும் தேர்வு செய்யாமல் நேராக அருகில் இருந்த கேட்டரிங் கல்லூரிக்கு சென்று ஆனந்த் ராஜ் சைட் அடித்து வந்த அந்த பெண்ணை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளார். அந்த பெண் வேறு யாருமல்ல பிரபல நடிகை ஜெயஸ்ரீ தான்.

#image_title

தென்றலே என்னை தொடு என்ற படம் மூலம் அறிமுகமான ஜெயஸ்ரீ தமிழில் ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் ஆனந்த் ராஜ் வாய்ப்பு கிடைத்து சினிமாவில் நுழையும் போது ஜெயஸ்ரீ வாய்ப்பு இன்றி வெளியேறினார். அதனால் அவரால் தான் ஆசைப்பட்ட பெண்ணுடன் இறுதிவரை நடிக்க கூட முடியாமல் போனது. இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

More in Cinema

To Top